மண் விட்டுக்கொடுத்தால்,
விதை உதயமாகும்!
மேகம் விட்டுக்கொடுத்தால்,
பூமியில் மழை முத்தமிடும்!
பூ விட்டுக்கொடுத்தால்,
மணம் சுகந்தக் காற்று வீசும்!
மரங்கள் விட்டுக்கொடுத்தால்,
பறவைகள் வாழும்!
இறுகப்பற்றுவதில் இல்லை இன்பம்,
வாழ்வின் ரகசியம் விட்டுக்கொடுப்பதுதான்!!!
picture source: Google