ஏக்கம்

படுக்கையில் தூய்மை!
அழகிய திரைச்சீலைகள்!
மருந்து வாசம்!
வெள்ளை தேவதைகளின் நடமாட்டம்!
மருத்துவரின் நிமிடத்திற்கு ஒரு விசாரிப்பு!

கற்றை பணக்கட்டுகளுடன் மகன்!
பரிவுடன் மகளின் கையில் பழரசம்!
பரிதாபத்தின் தாரத்தில் மருமகன்,மருமகள்!
பேந்த விழிக்கும் பேரன்,பேத்திகள்!
வராண்டாவின் கோடியில்,
உற்றார் உறவினர்!

படுக்கையின் நடுவில்,
நட்டநடு நாயகமாய் என் தோழி!
கதிர் அறுத்த வைக்கோலாய்!

ஏக்கப்பெருமூச்சு என்னிடம்!

அயல் நாடு சென்ற மகனையும்,மகளையும்,
ஒன்று சேர காணும் பாக்கியம்,
எனக்கும் ஓர் நாள் வரும்!
என்று வரும் என் இனிய இறுதி நிமிடம்?

Published by

kalaichemmal

Hoping to rediscover my love for Thamizh through poems. :)

2 thoughts on “ஏக்கம்”

Leave a comment